வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி: ரவிகரன் எம்.பி பங்கேற்பு
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு வவுனியா வடக்கு பிரதேச தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் நேற்று (02.05) அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா - புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
இந்நிலையில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்த அஞ்சலி நிகழ்வில், தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
அஞ்சலி
அதனையடுத்து பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் வரலாற்றுக் குறிப்புக்களும் பகிரப்பட்டது.

அத்தோடு தேனிசைசெல்லப்பாவின் பாடலும் இதன்போது பாடப்பட்டு அவருக்கு இசை அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam