மட்டு.கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவைகள் இரத்து (Photos)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த உதயதேவி புகையிரதம் இன்று மாலை புணாணைக்கும் வெலிகந்தைக்குமிடையில் தடம் புரண்டுள்ளது.
இதனால் இன்று இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை மற்றும் அதிகாலை 1.15க்குப் புறப்படும் சொகுசு புகையிரத சேவை, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று மாலை 7.00 மணிக்குப் புறப்படும் கடுகதி புகையிரத சேவை என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்துள்ளார்.
குறித்த புகையிரத பாதை சீர் செய்யப்பட்டவுடன் மீண்டும் குறித்த புகையிரத சேவை இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மூன்று தூர இட புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam