வீட்டு மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பதற்கான காரணம்! எரிசக்தி ஆணையகம் எச்சரிக்கை
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு திறனற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ஒரு முக்கிய காரணம் என்று இலங்கை நிலையான எரிசக்தி ஆணையகம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஆணையகத்தின் பணிப்பாளர் ஹர்ச விக்ரமசிங்க, 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காலாவதியான குளிரூட்டிகளுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள்
மேல் மாகாணத்தில் மட்டும், மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற நிலையில் உள்ளது.
இதன் விளைவாக மாதத்திற்கு கூடுதலாக 100 அலகுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை அதிக தேவைப்படுகின்றன.
இதேவேளை குறைந்த செயல்திறன் கொண்ட சாதனங்களின் இறக்குமதியை அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் கண்டிசனர் என்ற குளிரூட்டிகள்; மீதான சட்டத்தையும் அரசாங்கம் கடுமையாக்கும் என்று இலங்கை நிலையான எரிசக்தி ஆணையக பணிப்பாளர் விக்ரமசிங்க கூறியுள்ளார்.



