ஹோர்முஸ் நீரிணையில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு: ஈரான் அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கடல்சார் போக்குவரத்தை ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தின் கீழ் மேலாண்மை செய்வதற்கான புதிய கட்டமைப்பு ஒன்றை ஈரான் தயாரித்துள்ளதாகவும், இந்தத் திட்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஈரானின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வழித்தட ஒழுங்கமைப்பின் கீழ், வணிகக் கப்பல்கள் (Commercial Ships) மற்றும் ஈரானுடன் ஒத்துழைப்புடன் செயல்படும் நாடுகளுக்கு மட்டுமே இந்த நீரிணையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
ஈரான் கட்டணம்
இந்த புதிய கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் பிரத்யேக சேவைகளுக்காக (Specialised Services) சம்பந்தப்பட்ட கப்பல்களிடம் இருந்து ஈரான் கட்டணம் வசூலிக்கும்.

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில், ஈரான் இந்த புதிய கட்டுப்பாட்டு பொறிமுறையைக் கொண்டுவரவுள்ளமை சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam