உலகில் புலிக்கூத்து உள்ள ஒரே தமிழர் பகுதி
புலிக்கூத்து என்று ஒன்றைக் கிராமங்களில் ஆடும் நேரத்தில் எங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என இதுதொடர்பான கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இப்புலிக்கூத்தை ஆடவே கூடாது என சில அமைப்புக்கள் தடை செய்துள்ளன.
அவ்வாறு தடை செய்தாலும் நாங்கள் அரங்கேற்றித்தான் ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழரின் வீரத்தைச் சொன்னபடி, இலங்கையின் கிழக்கு மண்ணில் மட்டுமே ஆடப்படும் ஒரு பாரம்பரிய கூத்து முறை பற்றிய ஒரு தேடல்தான் இந்த ஒளியாவணம்.
அழிந்துவரும் தமிழரின் ஒரு முக்கிய கலை வடிவம்.. அழித்துவிடத்துடிக்கும் அதிகார வர்க்கம்..
ஆடக்கூடாது என்று கட்டளையிடும் தரப்புக்கள்..
‘புலி’ என்ற பெயரை மாற்றவேண்டும் என்று கட்டளையிடும் குழுக்கள்..
ஆடியே தீருவோம் என்று கங்கணம் கட்டி நிற்கும் வீரத் தமிழர்கள்..