எதிர்காலத்தில் தேங்காயின் விலை உயரக்கூடும்: வியாபாரிகள் சுட்டிக்காட்டு
எதிர்காலத்தில் சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவாக உயரக்கூடும் என்று வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, உள்ளூர் சந்தையில் தேங்காய்கள் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளதுடன் வருடாந்த தேங்காய் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய இலங்கை தெங்கு கைத்தொழில் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது.
தேங்காய் தட்டுப்பாடு
எனினும், இது தொடர்பாக இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதுடன் தற்போது சில பகுதிகளில் ஒரு தேங்காய் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதற்கிடையில், தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
