கண்டியில் பொலிஸ் உயர் அதிகாரி மசாஜ் நிலையங்களை நடத்தி வருவதாக தகவல்
கண்டி பொலிஸ் உயர் அதிகாரி, கண்டியில் நடத்தி வரும் இரண்டு மிகப் பெரிய மசாஜ் நிலையங்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன.
மசாஜ் நிலையங்களில் 15 பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்

கண்டி ராஜசிங்க மாவத்தை மற்றும் தம்மசித்த மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இந்த மசாஜ் நிலையங்கள் இயங்குவதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி, இந்த மசாஜ் நிலையங்களில் யுவதிகள் மற்றும் பெண் என 15 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக தெரியவருகிறது.
மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் கண்டி நகரம் முழுவது பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மசாஜ் நிலையங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கண்டி பொலிஸின் கீழ் மட்ட அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்

ஐஸ் போதைப் பொருள் விற்பனையும் இதன் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் சுற்றவளைப்பு தேடுதல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க குறித்த பொலிஸ் உயர் அதிகாரி இடமளிப்பதில்லை எனவும் தனக்கு சொந்தமாக இரண்டு மசாஜ் நிலையங்கள் இருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
கண்டி அம்பிட்டியவில் மாணவன் மீது மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டிய குற்றச் செயலை மறைக்க கண்டி பொலிஸார் நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவாராத இந்த விடயங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan