2005இல் மகிந்த ஜனாதிபதியாவதற்கு யார் காரணம்: அம்பலமாகும் உண்மைகள்..!
கடந்த 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றமைக்கு பிண்ணனியில் வன்னி மாவட்ட வேட்பாளர் எமில்காந்தன் பெரும் பங்காற்றியதாக ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலின் போதான சம்பவங்களில் தனது பங்கு இல்லை எனவும், அதற்கு அக்காலப்பகுதியில் இருந்த இரு முக்கிய பலம் பொருந்திய தரப்புகளாலும் இராஜதந்திர தரப்புகளாலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அவை என எமில்காந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பால் பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட முன்னர், சுனாமி நிதியத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நிதியில் ஒரு பெரும் தொகை தம்மூடாக வழங்கப்பட்ட பின்னரே விடுதலை புலிகள் அமைப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த காலத்தில் வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாக கட்டமைப்பு அதாவது அரச கட்டமைப்பு தான் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri