2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6 பில்லியனை கடந்துள்ளது.
அதிகரித்துள்ள கையிருப்பு
செப்டம்பர் மாதத்தில் இல், 5,994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் 6,467 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது 7.9% அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில் 7.3% அதிகரித்து 6,383 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில், இந்த எண்ணிக்கை 5,949 மில்லியன் டொலராக இருந்தது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 5.8% அதிகரித்து 42 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
2020 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6 பில்லியன் டொலரைக் கடந்துள்ளமை சிறப்பம்சமாகும்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
