கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு பிணை!
பொலிஸாரால் இன்று (15.06.2023) கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று (15.06.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் ஆகியோரே கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் இன்று விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது
இந்நிலையில் மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan