தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
புதிய இணைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் புறக்கணிப்பு சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெரும்பத்து கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தேர்தலை புறக்கணித்திருப்பது தேர்தல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கிராம மக்கள் பெரும்பாலும் வாக்களிக்க வராத சூழலிலும், சீலா என்ற பெண் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்.
கடந்த மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே, அவர்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நிலைமையை சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
தமிழ் நாட்டில், இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290 ஆவது வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4 மணி நேரமாகியும் வாக்களிக்காத மக்கள்
நெல்லை மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆரம்பமாகி 4 மணி நேரமாகியும் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளமையினால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri