யாழ்.சாவகச்சேரியில் விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(23.4.2026) மாலை நுணாவில் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
விசாரணை
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் , கனரக வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri