இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்ட மன்ற தேர்தல் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.
பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஜோசப் இந்தத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியமையே இந்த பரப்புக்கு காரணமாகும்.
காலை ஏழு மணி முதல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது வரையில் பல கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சட்ட மன்ற தேர்தல்
பொது மக்களுடன் அரசியல்வாதிகளும், திரையுலகத்தினரும் தமது வாக்கினை செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் சிங்கள ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் இந்தத் தேர்தல் தொடர்பான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று வரையில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிரான மோதல்கள் குறித்து முன்னிலைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு வந்த தென்னிலங்கை ஊடகங்கள் இன்று விஜயை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.
தேர்தல் முடிவுகள்
சமகால அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், புதிதாக தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் நான்காம் திகதி வெளியாகும் என ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கை உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்தத் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட பலர் தவெக கட்சியின் தலைவர் விஜய் ஜோசப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.