நாட்டில் கடுமையான இடி மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மாவட்டங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இடி மின்னல் தாக்கம் ஏற்படும் போது அந்தப் பகுதியில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |