சீனாவின் தொலைபேசிகளை தூக்கி எறியுங்கள்! அதிரடியாக விதிக்கப்பட்ட தடை - செய்திகளின் தொகுப்பு
சீனாவின் கைபேசிகளை தூக்கி எறியுமாறு லித்துவேனியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அந்நாட்டு மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
ஜியோமி கைபேசியின் எம்.ஐ.10 ரி 5 ஜீ கைபேசி ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும் எந்த நேரத்திலும் அதனைத் தொலைவிலிருந்து இயக்க முடியும் என்பதே இதற்கான காரணம் என லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
சீனாவின் கைபேசிகளை கொள்வனவு செய்வதைத் தவிர்ப்பது மற்றும் நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்தவற்றை அப்புறப்படுத்துவதே எமது பரிந்துரை என்று லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சர் மாகரிஸ் அபுகேவியஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,