அருவியில் குளித்த மூன்று பேர் மரணம்:மேலதிக விபரம்
மொனராகலை வெல்லவாய எல்லவல அருவியில் குளிக்க சென்ற மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மாத்தறையில் இருந்து வந்து இன்று மதியம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்.
உயிரிழந்த மூன்று நபர்களும் வயது வந்த ஆண்கள் எனவும் அவர்களில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை சிறிகல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த நபர்கள் குளித்த இடத்தில் இதற்கு முன்னர் சிலர் மரணித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த இடம் குளிப்பதற்கு உகந்த இடமல்ல என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நபர்கள் அங்கு சென்று குளித்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri