இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் அற்ற தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய 989 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் கைது
நேற்று ஒரே நாளில் மட்டும் பொலிஸாரால் 994 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 33 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத சொத்து ஈட்டல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வலையமைப்பு
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 312 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 731 கிராம் ஐஸ், 516 கிராம் கஞ்சா, 34 ஆயிரத்து 254 கஞ்சா செடிகள், 8 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 170 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 301 போதை மாத்திரைகள், ஒரு கிலோகிராம் 539 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 398 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக முடக்கும் நோக்கில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri