நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Kajinthan May 27, 2025 10:10 AM GMT
Report

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதி ஆகியிருக்கின்றது என உலக கனசதுர சங்க அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில்இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு அனுசியா ஜெயகாந்த் கருத்து தெரிவிக்கையில், "அனைத்தும் வரி குறைக்கப்படும் விலை குறையும் என்றார்கள் ஆட்சியாளர்கள்.

வெளிநாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

வெளிநாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

 ஆட்சி மாற்றம்

எதற்காக மீண்டும் மின்சார கட்டணத்துக்கு 18 வீதத்துக்கும் அதிக உயர்வு. இதில் என்ன நியாயம் இருக்கின்றது துறைசார் விற்பனரே இதற்கு சொல்லவேண்டும். இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே மாற்றமாக ஏற்பட்டுள்ளதே தவிர பொருளாதார நெருக்கடியோ வழங்கிய வாக்குறுதிகளோ நிறைவு செய்யப்படாது மக்கள் ஏமற்றப்பட்டதே மிச்சமாக உள்ளது.

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Thermal Power In Sri Lanka Criticism Highlighted

இந்நிலையில், மக்களின் மீது மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு என்ற சுமை சுமத்தப்படுவதகாகவும் அது தொடர்பில் இங்கு ஆலோசனை செய்ய ஒன்றுகூடியுள்ளது நகைப்புக்குரியது.

நாட்டின் இயற்கை வளத்தால் நிறைவுசெய்யும் உற்பத்தி செய்யக்கூடிய ஏதுனிலை இருந்தும் உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்காக குறைக்க வேண்டிய மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்காக ஆராய்கின்றோம். என்பதே உண்மை நிலைமையாக உள்ளது. வலுவான பொறிமுறைகள் இன்றி தள்ளாடும் இலங்கையின் திட்டமிடல்களுள் இது நிர்ப்பந்த உயர்வாகவே அமைகின்றது. ஆனாலும் இந்த கட்டண உயர்வை ஏற்க முடியாது.

இது மக்களை மேலும் வறியவர்களாக்குவதுடன் சிறுதொழில் முயற்சியாளர் மட்டுமல்லாது விவசாயிகள் பெரும் நிறுவனங்களும் செயலிழக்கும் நிலையை உருவாக்கும் என்பதே உண்மை இலங்கையில் தற்போது சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி என இயற்கை வடிவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் ஏதுனிலை இருக்கும் போது ஏன் அனல் மின் உற்பத்திக்கு ஊக்குவிப்பும் அதில் தங்கி இருக்கும் நிலையிலும் எமது நாடு இருக்கின்றது. இதை ஏன் வல்லுனர்கள் சிந்திப்பதாக இல்லை.

குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் முக்கிய அதிகாரி கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் முக்கிய அதிகாரி கைது

 கட்டண உயர்வு

இதற்கு தீர்வு காணப்படுதல் அவசியம். ஆட்சியில் தற்போது இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறியது. கடந்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி செய்ததாக. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த அவர்களால் ஏன் கட்டணங்களை குறைக்க முடியாதுள்ளது.

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Thermal Power In Sri Lanka Criticism Highlighted

அல்லது சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசாங்கம் பணிந்து விட்டதா? அல்லது இவர்களும் ஊழல் செய்கின்றார்களா? அல்லது கடந்த ஆட்சியாளர் மேல் இவர்கள் பொய் குற்றம் சுமத்தி உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றினார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுகின்றது. இதேவேளை மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.

மக்களின் இந்த அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்வது நல்லதாகாது. இதேவேளை ஏற்கனவே கட்டண உயர்வுக்கன முடிவை எடுத்துவிட்டு கண்துடைப்புக்காக இப்போது கருத்துக் கேட்பதும் ஊழல் தான். இதற்கும் மக்களின் வரியே அரச நிதியாக செலவாகின்றது அத்துடன் வறிய மக்களை உழைப்பை மேலும் சுரண்டும் செயலாகவும் இது அமையும் இது ஒருபுறம் இருக்க தற்போது எங்கு பார்த்தாலும் சூரிய மின் உற்பத்திக்கான கட்டமைப்புக்கள் முளைக்கின்றன.

ஆனால் அந்த மின்சாரத்தை பிரதான கட்டமைப்பில் இணைப்பதில் மின்சார சபை செய்யும் குளறுபடியும் ஆயிரம் அரசியலும் நடக்கின்றது. சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுமுழுதும் இயற்கை வளங்கள் இருதும் அதைப் பயன்படுத்தாது அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாய் இருப்பது வெட்கக்கேடாகும்.  அந்தவகையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எடுக்கும்.

இந்த கருத்துக் கேட்கும் முயற்சியில் மின்கட்டணம் அதிகரிக்க கூடாது, மக்களை மீண்டும் வறுமைக்கு உள்ளாக்க கூடாது என்பதை எனது பதிவாக முன்வைப்பதுடன் சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி ஆகிவவற்றை மேம்படுத்த சிறந்த பொறிமுறை வகுக்கப்பட்டு அனல்மின் மாபியாவின் படியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றேன்” என குறிப்பிட்டார். 

தென்னிலங்கையை உலுக்கிய மரணம் : வைத்தியசாலைக்குள் நடந்த மோசமான சம்பவம்

தென்னிலங்கையை உலுக்கிய மரணம் : வைத்தியசாலைக்குள் நடந்த மோசமான சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US