தென்னிலங்கையில் பாரிய விபத்தை தடுத்த ரயில் சாரதி
அம்பலங்கொடயில் ரயில் வீதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்து ரயில் சாரதியின் செயற்பட்டினால் தடுக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் வீதியில் கேட் மூடப்படாமல் இருந்தமையினால் நேற்று இரவு கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கவிருந்த தபால் ரயில் அம்பலங்ஙகொட, எல்பிட்டிய பிரதான வீதியின் கந்தெகொட ரயில் வீதிக்கு அருகில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ரயிலின் சமிஞ்சைகள் பல முறை ஒளிரப்பட்ட போதிலும் அதற்கு பொறுப்பான அதிகாரி ரயில் கேட்டினை மூடவில்லை என சாரதி தெரிவித்துள்ளார்.
பின்னர் ரயில் செயற்பாட்டாளர் ரயில் இருந்து இறங்கி ரயில் கேட் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பேற்படுத்தி அதனை மூடுமாறு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கந்தகொட ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில்ல ரயில் கேட் செயற்பாட்டாளர் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.