இலங்கையின் நிலைமை இந்தியாவை விட மோசம்
கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்து்ளளார்.
இலங்கையில் 30 லட்சம் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்குள் இந்தியாவை விட வேகமாக கொரோனா பரவுகிறது. இதற்கு தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவே பொறுப்புக் கூற வேண்டும்.
அவர்கள் பொய்களை கூறி, அதிகாரிகளையும் நாட்டை தவறாக வழிநடத்துவது மாத்திரமின்றி, ஜனாதிபதியையும் இராணுவ தளபதியையும் ஏமாற்றி வருகின்றனர் எனவும் சஞ்சய பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
You My Like This Video