துறைமுக நகரம் தொடர்பான சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு
நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை பாதுகாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் பிரதி ஆவணப் பதிவாளர் நாராம்பனாவே ஆனந்த தேரரை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் சம்பந்தமான ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சட்ட அறிஞர்களின் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வர வேண்டும் எனினும் நாட்டின் சுதந்திரம், சுயாதீன மற்றும் இறையாண்மை பாதுகாப்பு அத்தியவசியம் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.