பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடவத்த - கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஆயுதக்களஞ்சியப்பொறுப்பதிகாரி
மேற்படி முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
59 வயதான குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடுவலை - ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
துப்பாக்கிச்சூட்டுக்களால் அதிரும் இலங்கை: ஒரு மாதத்தில் மாத்திரம் 20 பேர் படுகொலை |