பூஜை நடத்தி பணத்தை இரு மடங்காக பெருக்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த நபர்
பைரவர் பூஜையை நடத்தி பணத்தை இரண்டு மடங்காக பெருக்கி தருவதாக கூறி, வர்த்தகர் ஒருவரிடம் லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த அவரது நிறுவனத்தில் பணிபுரியும் முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த முகாமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு பூத அருள் இருப்பதாக கூறி, பணத்தை தனியாக தட்டு ஒன்றில் வைத்து பைரவருக்கு பூஜை செய்தால், பணத்தை இரண்டு மடங்காக பெருக்க முடியும் என சந்தேக நபர், வர்த்தகரிடம் கூறியுள்ளார்.
இதற்கு அமைய பைரவ பூஜைக்கு வழங்க வேண்டிய பொருட்கள் குறித்து வர்த்தகருக்கு அறிவித்துள்ளார்.
பைரவ பூஜை நடத்தும் போது சந்தேக நபர் அருள் வந்த நிலையில், வர்த்தகரை தாக்க முயற்சித்துள்ளார்.
இதன் காரணமாக வர்த்தகர் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். இதன் பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, பணம் வைக்கப்பட்டிருந்த உறையில் மணல் மாத்திரம் இருந்துள்ளது.
பணம் எங்கே என கேட்ட போது, தனக்கு எதுவும் தெரியாது, அது பைரவருக்கு மாத்திரமே தெரியும் என சந்தேக நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தகர் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன பணம் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 8 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri
