ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பலர் கலந்து கொள்வதை புறக்கணித்துள்ளனர்.
இதற்கமைய, மொட்டுக்கட்சியினை சேர்ந்த முக்கியஸ்தர்களில் பலர் நேற்றைய தினம்(4) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பங்குபற்றுவதை தவிர்த்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு கடிதம்
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு முன்னதாகவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் கடைசிநேரம் வரை தங்களின் வருகை இன்மை குறித்து அறிவிக்காத நிலையில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
முக்கியஸ்தர்கள்
இதேவேளை நேற்றைய கூட்டத்தில் நாமல் ராஜபக்ச சகிதம் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு: கோ.கருணாகரம் |