திருகோணமலையில் புளியம்பழம் பறிக்க சென்றவருக்கு நேர்ந்த கதி
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வட்டமடு பகுதியில் மரத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவதுள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (15.06.2023) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் வீட்டிலிருந்து தனது தந்தையின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போதே இவ்வாறு மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா - சூரங்கல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஷாகுல் ஹமீட் அலி இப்னு (49வயது) எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
திடீர் மரண விசாரணை அதிகாரி
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி சுபைர் ஷாபி குறித்த மரணம் தொடர்பில் சரியான தகவல் பெற்றுக் கொள்ள இயலாத நிலையில் பிரேத பரிசோதனையை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் கிண்ணியா பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதற்கமைய திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை பிரேத பரிசோதனைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும்.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
