நாட்டிற்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம்
பாகிஸ்தானில் பணி புரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை (திங்கட்கிழமை) குறித்த சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இலங்கை பிரஜையான பிரியந்த தியவதன ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! குற்றவாளிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam