பயங்கரவாதியின் வீட்டிற்கருகே வெடிகுண்டு தாக்குதல்! இந்தியாவை குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான்
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தின் வீட்டிற்கு அருகே கடந்த 23ம் திகதி வெடிகுண்டு தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹபீஸ் சயீத் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,ஹபீஸ் சயீத் வீட்டிற்கு அருகே இடம்பெற்ற தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹபீஸ் சயீத் இல்லத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாகப் பாகிஸ்தான் இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "23 ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரு இந்தியர். அவருக்கு ரா-வுடன் (இந்திய உளவு அமைப்பு) தொடர்புள்ளது.
இந்த பயங்கரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்குவது குறித்த தரவுகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் எங்களிடம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
