நாளை நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் போட்டி! இலங்கை வந்தடைந்துள்ள இந்திய அணி
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகளுக்காக இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்குமான போட்டி நாளை(15) கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி
இந்த போட்டிகளுக்காக விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், இலங்கை அரசின் தலையீட்டினால் தீர்மானத்தை மாற்றிக்கொண்டு போட்டியில் விளையாட ஒத்துக்கொண்டது.
அதனை தொடர்ந்து பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிக்கு செல்லும் இரசிகர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! வெளியாகியுள்ள வானிலை எச்சரிக்கை







