மன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு
நாடு முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும், ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்கு முன்பாகவும் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும், ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு 87 நாட்கள் அரசாங்கம் தீர்வு வழங்காமையை சுட்டிக்காட்டியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே, ஆசிரியர் தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அடிபணிய மாட்டோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
