தமிழ் மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்..! கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக ரவிகரன் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Sri Lanka Government K.D. Lalkantha NPP Government
By Ashik Feb 18, 2026 07:35 AM GMT
Report

தமது காணிகளை பறித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு கட்டமைப்பாக மகாவலி அதிகார சபையை தமிழ் மக்கள் வெறுப்புடன் நோக்குவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை மகாவலி அதிகார சபையினால் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் தமிழ் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று ( 17.02.2026 ) கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. .

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதுதொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்டதற்கு அமைவாக கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (17) கிவுல் ஓயா நீர்ப்பாசன குடியேற்ற திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்..! கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக ரவிகரன் எச்சரிக்கை | Tamil People Will Not Accept It Ravikaran Warns

அந்த வகையில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த கிவுல் ஓயா திட்டம் சார்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் இத்திட்டம் தொடர்பான பாதக நிலைமைகளை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன் குறிப்பாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏற்படப்போகும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பாக எம்மால் மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கூழாங்குளம் வயல், வெடிவைத்தகல்லு வயல், வெடிவைத்தகல்லு கிராமம், ஈச்சங்குளம் வயல், கோவில் புளியங்குளம் வயல், காட்டுப் பூவரசங்குளம் வயல், காஞ்சூரமோட்டை கிராமம் உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக பகுதிகள் 910 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்க போகிறது.

கிவுல் ஓயா திட்டம் 

இதனால் அந்த நிலங்களுக்குரிய மக்கள் பாதிக்கப் பட போகின்றனர் எனினும் இத்திட்டம் சாரந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப் படுகின்றபோது இத்திட்டத்தினால் பாதிக்கப்பட போகின்ற தமிழ் மக்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

தமிழ் மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்..! கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக ரவிகரன் எச்சரிக்கை | Tamil People Will Not Accept It Ravikaran Warns

குறிப்பாக கடந்த 09.02.2026 அன்று குறித்த கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் மணலாறு பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத்திட்டத்தால் பாதிக்கப்பட விருக்கின்ற தமிழ் மக்கள் அழைக்கப் படாதமை குறித்து சுட்டிக்காட்டியதோடு, இத்திட்டத்தால் பயன்பெற விருக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் மாத்திரமே அக் கலந்துரையாடலில் அழைக்கப்பட்டிருந்த மையினையும் அமைச்சர் லால் கிந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மேலும் இத்திட்டத்தினால் ஏற்கனவே தமிழ் மக்களின் பூர்வீக பகுதியான மணலாற்றை அபகரித்து அங்கு குடியேற்றப்பட்டுள்ள 4372 பெரும்பான்மையினக் குடும்பங்களும், குடியேற்றப்படவுள்ள 1628 பெரும்பான்மையின குடும்பங்களுமாக மொத்தம் 6000 வரையிலான பெரும்பான்மையின குடும்பங்களே இத்திட்டத்தினால் பயன்பெற விருப்பதாக திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வனவிலங்குகள்

அத்தோடு அடர் வனங்கள் அழிக்கப்படப் போவதால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பிலும் எம்மால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன குறிப்பாக இத்திட்டத்திற்கென காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி உள்ளிட்ட விடயங்களில் தாக்க மேற்பட்ட என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் என்பன அழிவடையும் ஆபத்துத்துக்களும் ஏற்படும்.

மேலும் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்குகின்ற ஒரு கட்டமைப்பாகவே மகாவலி அதிகாரசபை தமிழ் மக்கள் நோக்குகின்றார்கள்.

தமிழ் மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்..! கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக ரவிகரன் எச்சரிக்கை | Tamil People Will Not Accept It Ravikaran Warns

அந்தவகையில் கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பறித்து மகாவலி அதிகாரசபை 30 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒருவருக்குத் தலா 25 ஏக்கர்வீதம் பகிர்ந்து கொடுத்ததை இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

இந்த 30பயனாளிகளில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வாவின் தங்கையும் அடங்கியுள்ளார்.

அத்தோடு மணலாறுப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் மகாவலி அதிகாரசபையால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிராந்தளிக்கப்பட்டன.

அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு தமிழ் மக்களிடம் காணி அனுமதிப்பத்திரம் இருக்கத்தக்கதாக கடந்த 2013ஆம் ஆண்டு மயில் குளம் என்ற இடத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் மகாவலி அதிகாரசபையின் காணி அனுமதிப்பத்திரங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதுதவிர வவுனியா வடக்கில் திரிவச்ச குளம் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்து அந்தர் வெவ என அப்பகுதி பெயர்மாற்றப்பட்டிருப்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினேன்.

கொழும்பில் சொந்த வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! கனவு நனவாகிறது..

கொழும்பில் சொந்த வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! கனவு நனவாகிறது..

மகாவலி அதிகாரசபை

அத்தோடு மகாவலி அதிகாரசபையின் ஆளுகையிலுள்ள திரிவைச்சகுளத்தின் அருகேயுள்ள அடர்வனங்கள் பாரிய அளவில் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதற்கெதிராக முறையீடு செய்யப்பட்டபோதும் மகாவலி அதிகாரசபை இதுவரை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை அவ்வாறு காடு அழிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களின் வருமானம் என்னவானதென்பது கூட தெரியாத நிலையே காணப்படுகின்றது என்பதையும் இதன்போது வெளிப்படுத்தினேன்.

இவ்வாறாக தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் மகாவலி அதிகாரசபை மும்முரமாக ஈடுபடுவதாலேயே தமிழ் மக்கள் மகாவலி அதிகாரசபையை வெறுப்போடு நோக்குகின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

தமிழ் மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்..! கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக ரவிகரன் எச்சரிக்கை | Tamil People Will Not Accept It Ravikaran Warns

அத்தோடு தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதுடன், சூழலியல் பாதிப்புக்கள் என பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுதனதவுள்ள இத்திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.

இந்நிலையில் இதன்போது அமைச்சர் கே.டி.லால்காந்த பதிலளிக்கையில், இத்திட்டத்தின் பாதகநிலைதொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து கையெழுத்திட்டு தம்மிடம் சமர்பிக்குமாறு தெரிவித்ததுடன், தாம் உரியவகையில் நிலமைகளை ஆராய்ந்து நடவடிக்மைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தம்மால் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடாத்தப்படுமெனவும் அமைச்சர் கே.டி.லால்காந்தவால் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், அக்கலந்துரையாடலுக்கு உரிய அனைத்துத் தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுமெனவுந் தெரிவித்தார்.

குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தை இம்மாதமே நடாத்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்து முன்னெடுக்குமாறு நான் இதன்போது அமைச்சரிடம் கோரியிருந்தேன் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கு தொடரும் சிக்கல் : T20 தொடரில் இருந்து விலகும் மதீஷ

இலங்கை அணிக்கு தொடரும் சிக்கல் : T20 தொடரில் இருந்து விலகும் மதீஷ


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US