தமிழகம் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்: வெளியாகியுள்ள தகவல்கள்

By Sivaa Mayuri Nov 01, 2022 12:17 PM GMT
Report

அண்மையில் தமிழகத்தின் கோவையில் இடம்பெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 24 ஆண்டுகளுக்கு முன்னர், கோவையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் எல்.கே.அத்வானியை குறிவைத்து இந்த வெடிகுண்டுகள் நடத்தப்பட்டன. இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள்

தமிழகம் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்: வெளியாகியுள்ள தகவல்கள் | Tamil Nadu Coimbatore Blast Incident

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, 29 வயதான ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் அவர் சென்ற காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதை அடுத்தே அவை கைப்பற்றப்பட்டன.

இதனைக்கொண்டு நாசவேலைகளை மேற்கொள்ளும் சதி முயற்சியில் முபீன் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கோவையில் சிறப்புக் குழு நடத்திய விசாரணையில், முபீன் தற்கொலைப் படை அல்ல என்றும், அவருக்கு வெடிமருந்துகளைக் கையாளத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

உண்மையில் அவருக்கு தற்கொலை எண்ணம் இருந்தது. ஆனால் அவர் ஒரு குண்டுவெடிப்பில் தன்னை தானே கொல்லத் திட்டமிடவில்லை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

முபீர் பற்றி வெளியாகிய தகவல்

முபீனை அறிந்தவர்களின் தகவல்படி, அவருக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்ததாகவும் கூறினார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு வரை, அவர் ஒரு புத்தகக் கடையில் பணிபுரிந்தார், பின்னர், உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அவரது வீட்டில் இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவினர் சோதனை நடத்திய பின்னர், அந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறுமாறு கோரப்பட்டது.

பின்னர் பழைய துணிகளை விற்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். அவர் 5-10 ரூபாய்க்கு பழைய சட்டைகளைப் பெற்றும் அவற்றை சுத்தம் செய்து 15 ரூபாய்களுக்கு விற்பனை செய்யும் தொழிலையே அவர் இதுவரை காலம் மேற்கொண்டு வந்தார் என்று அவரின் உறவினரொருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்: வெளியாகியுள்ள தகவல்கள் | Tamil Nadu Coimbatore Blast Incident

பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

முபீனும் மற்றவர்களும் கோயம்புத்தூரில் குறைந்தது ஐந்து இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்தனர். அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை சேகரித்துள்ளார்.

முபீன் மேலும் சிலருடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்து பொருட்களை மாற்றுவதைக் காண முடிந்தது.

எனவே, அவர்கள் தாக்குதலைத் திட்டமிட்டுள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்பட்டது, ஆனால் இலக்கு வேறுபட்டது, என்று விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தி ஃபெடரலுக்கு தெரிவித்தார்.

தேடலின் போது, முபின் ஐந்து இடங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்தை நாங்கள் மீட்டோம். இவை அவரது இலக்குகளாக இருக்கலாம்.

இந்த ஐந்து இடங்களில் பொலிஸ் ஆணையர் அலுவலகம், மாவட்ட நிர்வாகி அலுவலகம், ரயில் நிலையம், ரேஸ் கோர்ஸ், விக்டோரியா நகர மண்டபம் ஆகிய இடங்கள் உள்ளன.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம்

தமிழக பொலிஸாரின் கூற்றுப்படி, வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான பெரோஸ் இஸ்மாயிலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய இரண்டு பேரை, தாம் கேரள சிறையில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார்.

அண்டை மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீன் மற்றும் ரஷீத் அலி ஆகியோரையே அவர் சந்தித்தார் என்றும், சந்திப்பின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்: வெளியாகியுள்ள தகவல்கள் | Tamil Nadu Coimbatore Blast Incident

அசாருதீனும், அலியும் அண்டை மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முபீன் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

எனினும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 1998ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புக்கும் சமீபத்திய சிலிண்டர் வெடிப்புக்கும் இடையேயான தொடர்பு அல்-உம்மா என்ற பயங்கரவாத அமைப்பின் தொடர்பில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவர் - முகமது தல்கா அல்லது டல்கா அல்-உம்மா தலைவர் சையத் அகமது பாஷாவின் சகோதரர் நவாப் கானின் மகன் ஆவார், முகமது தல்கா,1998 தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US