கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மேலும் மண்சரிவு அபாயம் - சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 3 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை பகுதிகள்
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முப்பத்தைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் பெய்த மழை காரணமாக ஆய்வுக்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை 5,450 என்று சுமிந்த ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
அந்த கோரிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 10,884 என்றும், 1,433 இடங்களின் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்திற்குள் பரிசோதனைக்காகக் கோரப்பட்டிருந்த பாடசாலைகளின் எண்ணிக்கை 128 ஆக இருந்ததுடன், அவற்றில் 120 பாடசாலைகளின் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan