தமிழ் தரப்பினரின் கோரிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

Anura Kumara Dissanayaka Dullas Alahapperuma Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Shan Jul 21, 2022 09:29 AM GMT
Report

ரணில் மற்றும் டலஸ்க்கு வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு வாக்களித்ததின் நோக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர், அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அருட்தந்தை இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய ஜனாதிபதி தெரிவு

"மக்கள் எழுச்சியால் பதவி விலகிய கோட்டாபயவின் எஞ்சிய பதவிக்காலத்தை நிறைவு செய்ய, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் தற்காலிக ஜனாதிபதியாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தரப்பினரின் கோரிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் | Tamil Mps Should Reveal Purpose Voting Ranil Dalas

இது தொடர்பில் பல நபர்களிடம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறு இருப்பினும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவரது வெற்றியின் பங்குதாரர்களாகவே உள்ளனர். 

தமிழ் தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகள்

இவர்களுக்கு வாக்களித்த தமிழ் தரப்பினர் தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து இவர்களிடம் எதிர்பார்த்து முன்வைத்த கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியாவதற்கு போட்டியாளர்களாக முன் நின்ற எவருமே தமிழ் மக்களை பொறுத்தவரையில் நம்பிக்கை அற்றவர்கள். மேலும், இந்த தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு எந்த ஒரு தமிழ் உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை.

தமிழ் தரப்பினரின் கோரிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் | Tamil Mps Should Reveal Purpose Voting Ranil Dalas

இதனால் ஏனைய இருவருக்கும் வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு வாக்களித்த நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஜனநாயகம்.

மக்கள் கோரிக்கையை அடைவதற்கான வழி

எமது தமிழ் உறுப்பினர்களும் வெற்றியாளரிடம் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி, மக்கள் அலையை உருவாக்கினால் மாத்திரமே கோரிக்கையை அடைவதற்கான வழியை தமிழர் தாயகத்திலும், புலம் பெயர் சமூகத்திலும் உருவாக்க முடியும். இல்லையெனில், இவர்களுக்கு எதிரான தீர்ப்பை மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்குவார்கள்.

புதிய ஜனாதிபதி மக்கள் எழுச்சிக்கு காரணமானவர்களை சமாளிக்க வேண்டும். அவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களின் 6 கோரிக்கைகளில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை. அதனை அவர்களால் உள்ளடக்கவும் முடியாது. அடுத்ததாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வீதிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகள் வழங்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் தரப்பினரின் கோரிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் | Tamil Mps Should Reveal Purpose Voting Ranil Dalas

இதற்கு மத்தியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு ராஜபக்ச தரப்பினரோடு நல்லிணக்க அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு தனது கட்சியையும் மீளுருவாக்கம் செய்ய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்காதிருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ் தரப்பினர் ரணிலிடம் முன்வைத்த கோரிக்கைகள் அபிலாசைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தினால் அதை நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில், சர்வதேசத்துக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமாக அமையும் தெற்கின் அரசியல்வாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என உணர்வதற்கும் இதனை செய்யத்தவறின் சலுகைகளுக்கும் பதவி சுகத்திற்கும் பலியானவர்கள் என அடையாளப்படுத்தி மக்கள் தீர்ப்பு வழங்க காலமெடுக்காது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US