ஆடம்பர உலங்குவானூர்தியை வாங்கும் இலங்கையின் முன்னணி கோடீஸ்வரர்
இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர தனது வணிக நடவடிக்கைகளுக்காக ஒரு தனியார் உலங்குவானூர்தியை வாங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 கண்காட்சியில் கலந்து கொண்டு தனது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு புதிய உலங்குவானூர்தியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துள்ளார்.
T20 - இந்தியா vs பாகிஸ்தான் போட்டி! பரபரப்பாகும் கொழும்பு : உச்சம்தொட்ட சொகுசு ஹோட்டல் அறைகளின் விலை
பரபரப்பான பயணத்தேவை பயன்பாடு
இந்த சிறிய விமானம் 6 அல்லது 7 பயணிகளை அமர வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடு வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல, வணிக நிர்வாகிகளுக்கு மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தும் முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அவர் தனது சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது பரபரப்பான பயணத் தேவைகளைக் கொண்ட பிற வணிகத் தலைவர்களுக்கும் வழங்கும் வகையில் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
இந்த கண்காட்சியில் பெல் 505 ஹெலிகொப்டர்களின் செயல்திறன் மற்றும் இலங்கை நிலப்பரப்புக்கு அவற்றின் பொருத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.





