தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்

Sri Lanka Army Mahinda Rajapaksa Mullivaikal Remembrance Day Government Of Sri Lanka
By Kanamirtha May 17, 2022 11:55 PM GMT
Report

கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் எனும் புனித மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறும் நாளே முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களாலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களாலும் ஆண்டு தோறும் மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழினம் எதிர்கொண்ட இனவெறித்தாக்குதலும் இன அழிப்பும்

2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியிலேயே இலங்கையின் வடக்கு, கிழக்கு கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இரவிலிருந்து ஈழ இறுதிப்போர் மிகவும் கொடுமையாக அமைந்திருந்தது.

மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் இலங்கை அரசாங்கத்தின் இனவெறி தாக்குதல் அதி உக்கிரம் அடைந்திருந்தது. இதன்போது இலங்கைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட மேலும் 15 நாடுகள் போருக்கு உதவி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. 

மூன்றே நாட்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் அழிக்கப்பட்டு ஈழத்தில் ஒரே ஓலம். இந்த கொடுமையான காலப்பகுதியை எந்த ஒரு தமிழனாலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

கடந்த 2007-2008 வன்னிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் வான்வழி, தரைவழி என மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்களால் ஏறத்தாழ 4 லட்சம் தமிழ்மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம்பெயர வேண்டிய அபாயம்நிலை ஏற்பட்டது.

இவ்வாறு போர் உக்கிரமடையும் நிலையில் பாலகர்கள் கூட பதுங்கு குழிகளிலும், வீதிகளிலும், மரங்களிலும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர் முற்றி ஒரு கட்டத்தில் பதுங்கு குழிகளே மரணக் குழிகளாக மாறின. 

எங்குபார்த்தாலும் பிணக்குவியல்களும், அதனை அடக்கம் செய்யமுடியாதளவுக்கு இடைவிடாத தாக்குதல்களுமாக மயான பூமியாகியது முள்ளிவாய்க்கால் மணற்பாங்கான பூமி. பல தாய்மார்கள் தன்னுடைய குழந்தைகளை மார்போடு அணைத்த படியே சாகடிக்கப்பட்டனர்.

இவ்வாறு அநியாய யுத்தம் செய்து உயிர்களை அழித்தமையை ஒரு பெருமையாக எண்ணி, 30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என மார்தட்டி கொண்டார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மக்கள் எதிர்கொள்ளும் சவாலும்

அது அவ்வாறிருக்க உயிர்நீத்த உறவுகளை நிம்மதியாக நினைவுகூரத்தான் முடியுமா என சிந்தித்தால் அவ்வளவு எளிதாக ஆம் என சொல்லிவிடமுடியாது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில் கொள்ளும், மே 18 ஆம் திகதியும், தமிழ் மக்களின் ஆன்மாவுடன் ஒன்றுபட கலந்து விட்டது எனலாம்.

போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள், தடைகள் பல காணப்பட்டன.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

காலப்போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறின.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் காணப்பட்ட பாதுகாப்பு இறுக்க நிலைக்கு மத்தியிலும் சாதாரணமாக நினைவுகூரல்கள் இடம்பெற்றன.

ஆனால் 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனைக் காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அரசாங்கம் தடைபோட்டது என்றே சொல்லலாம்.

அதேபோல் 2021ஆம் ஆண்டும் இதே நிலைமை காணப்பட்ட போதிலும் அமைதியான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது. 

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது பொதுவான ஒருவிடயம். இது போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொறுத்தவரையில் ராஜபக்ச அரசாங்கம் தமக்கு எதிரான ஒன்றாகவே அதனை பார்த்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது, ஆட்சியிலிருந்த அரசாங்கமே இப்போது பதவியில் இருக்கிறது.

அந்தப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படுகின்றவர்களே அரசாங்கத்தின் பிரதான தலைவர்களாக மாத்திரமன்றி, முக்கியமான பொறுப்புகளிலும் இருந்தார்கள்.

போருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த, போரில் நடந்த மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக, அடையாளப்படுத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளிலிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில், தாம் பதவியில் இருக்கின்ற போதே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தமது முகத்துக்கு நேராக விடுக்கப்படுகின்ற சவாலாகவே அவர்கள் உணருவதாகத் தெரிகிறது.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

அதனால் தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றுவதற்கு அனுமதிக்காத வகையில், பொலிஸாரையும், இராணுவத்தினரையும் களமிறக்கியிருந்தது அரசாங்கம்.

இந்த நினைவேந்தலைத் தடுப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்த நிலையிலும், அதனையும் மீறி நிகழ்வுகள் ஆங்காங்கே நடத்தப்பட்டிருந்தன. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலை

இந்நிலையில் இந்த வருடம் தமிழ் மக்கள் திருப்திகரமாக தமது முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வார்களா என கேட்டால் அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் தற்போதைய இலங்கையின் அரசியல்களம் ஸ்திரமற்றநிலையில் உள்ளத்துடன், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குத் தடையில்லை என அறிவித்துள்ளார்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

30வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தவராக மார் தட்டி கொண்டவர் தற்போது இலங்கையிலேயே மக்களிடம் மறைந்து வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டு அது மக்களின் கழுத்தை நெரிக்கும் நிலை ஏற்பட்டதால் மக்களால் புரட்சி வெடித்து அதன் உச்சக்கட்டமாக யுத்த வெற்றி கண்ட மகிந்த ராஜபக்ச பதவிவிலகியமை அதே மே மாதம் இடம்பெற்றமை கடவுளின் தீர்ப்பு என்று கூறினால் மிக பொருத்தமானதாக இருக்கும்.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ''கோட்டா கோ கம'' மற்றும் ''மைனா கோ கம'' என போராட்ட களங்களை அமைத்து அங்கு அவர்கள் மேற்கொண்ட போராட்ட வடிவமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் அத்துடன் அவர்களது கருத்துக்கள் தமிழ் மக்களின் ஈழப்போருக்கான நியாயத்தை எடுத்துக்காட்டியிருந்தது. இவ்வாறு அவர்கள் உணர்ந்துள்ளார் என்பது சிறந்த விடயம் தான்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் | Tamil Annihilation And Commemoration Mullivaikkal

அது அவ்வாறிருக்க இந்த மாதம் தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கான அஞ்சலி அனுஷ்டிப்புகள் மற்றும் நிகழ்வுகளைப் பல பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் பொத்துவில் தொடக்கம் முறுகண்டி வரை நடை பேரணி ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஓரளவு சிறப்பாக இடம்பெறும் என நம்பப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் என்பது தமிழ்மக்களின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு அடையாளமாக இருக்கின்றமை புதிதல்ல. ஆனால் இந்த வருடம் முதல் அது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதிலும் பதியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

ஏனெனில் காலிமுகத்திடலில் இசைப்பிரியாவின் உருவப்படம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இனத்தவரால் அஞ்சலி செலுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதிலும் தமிழர்களின் ஈழவரலாறு பதியத் தொடங்கியுள்ளது எனலாம். 

இக்கட்டுரை பொது எழுத்தாளர் அமிர்தா அவர்களால் எழுதப்பட்டு தமிழ்வின் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.


இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்(Video)
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US