யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவர் யாழ். விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் ஊடாக நாடு திரும்பிய இவரை யாழ். மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத் தடுப்புபிரிவு பிரிவினர் கைது
இந்தியாவில் இருந்து இன்று(03.11.2023) காலை விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேக நபர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
