திடீரென பற்றியெரிந்த வீடு: தீயில் சிக்கி உடல் கருகி நபரொருவர் பலி
இரத்தினபுரி - மல்வல வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அங்கு தங்கியிருந்த ஒருவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

தீ விபத்திற்கான காரணம்
உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும், மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri