மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்: 4 பேர் கைது(Photo)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 4 பேரை பொலிஸார் இன்று (09) கைது செய்துள்ளதுடன் வாள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
இந்த பிரதேசத்தில் சம்பவதினமான கடந்த மே மாதம் 20 ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரை பழைய பகை காரணமாக அவரை மறித்து அவர் மீது 6 பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் தலைமறைவாகி வந்த 22, 35, 45, 40 வயதுடைய நான்கு பேரை இன்று செய்துள்ளதுடன் வாள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தலைமறைவாகியுள்ள இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



