இலங்கை வந்த சுவிஸ் நாட்டு பெண் திடீர் மரணம்
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.
சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் எலினா டனல் எனப்படும் 28 வயதான வெளிநாட்டு பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணம்
உயிரிழந்த பெண் கடந்த மாதம் 31ஆம் திகதி தனது நெர்லாந்து காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் நுவரெலியா, கண்டி பயணம் மேற்கொண்டு நேற்று எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இருவரும் அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
திடீர் சுகயீனம்
இதன் போது அங்கு திடீரென சுகயீனமடைந்த பெண் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
