விவசாயத்தை அழிக்கும் விலங்குகளின் கணக்கெடுப்பு வெற்றி! நாமல் கருணாரத்ன அறிவிப்பு
விவசாயத்தை அழிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு வெற்றிகரகமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) அறிவித்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) நாடளாவிய ரீதியில் குரங்குகள், மர அணில்கள், மயில்கள் போன்ற விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது கிராம அலுவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஆகியோரும் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஒத்தாசை வழங்கியிருந்தனர்.
கணக்கெடுப்பு வெற்றி
தனியார் காணிகள், பொது இடங்கள், மதவழிபாட்டு பிரதேசங்கள், புனித பூமிப் பிரதேசங்கள் என்பவற்றில் காலை எட்டு மணி தொடக்கம் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கிடையே இன்று மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு வெற்றி அடைந்துள்ளதாக கமத் தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan