சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை ! மூன்று விதமான முரண்பட்ட கருத்துக்கள்
துவான் சுரேஷ் சலே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டரா என்ற விடயத்தில் அவர் மூன்வரிடம் மூன்று வித முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அவரது சகோதரர் மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் ஊடகங்களுக்கு சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர்.
அவருக்குக் கடுமையான சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் கொடுப்பதாக குற்றச்சாட்டினர்.
விடுதலைப் புலிகளின் தலைவரது இடத்தைக் காட்டிக் கொடுத்த சுரேஷ் சாலே! ஒரு அறைக்குள் இருந்த 7 சிசிடிவி கமராக்கள்
முரண்பட்ட கருத்துக்கள்
உண்மையிலேயே இவ்வாறானதொரு சம்பவம் நடந்ததா என்பது குறித்து நாங்கள் மேலும் சில விபரங்களைத் தேடிப் பார்த்தோம்.கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்படுகிறார்.
அதன் பின்னர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் ஊடாக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டுவரப்படும் போதே வெள்ளை உடை அணிந்த ஒரு குழுவினரால் அவர் இவ்வாறானதொரு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவம் நடந்ததன் பின்னர் அவரைப் பார்வையிடுவதற்கு நீதவான் சென்றிருந்தார். அப்போது நீதவான் அவரிடம் 'உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா?'
எனக் கேட்டபோது தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உடைகளைக் களைந்து பரிசோதனை மாத்திரமே செய்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது தனக்கு எந்தவித சித்திரவதையோ அல்லது வேறு அநீதியோ நடக்கவில்லை என்பதை அவர் நீதவானிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மே மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அவர் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்கும் போது தனது உடைகளைக் களைந்து குனிய வைத்து மலக்குடல் பகுதியைத் தீவிரமாகப் பரிசோதித்ததாக நீதவானிடம் கூறாத சில விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிரடிப்படை செய்த பரிசோதனை
அதேநேரம் மூன்றாவது தடவையாக அவர் ஒரு மனநல வைத்தியர் பரிசோதித்த போது 'எனக்கு இப்படி ஒரு பரிசோதனை செய்தார்கள் ஆனால் வெட்கம் காரணமாக என்னால் மீதி விபரங்களைக் கூற முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவரது வாக்குமூலங்களில் மூன்று வெவ்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த பரிசோதனையை சிஐடி செய்யவில்லை.
விசேட அதிரடிப்படையினரின் ஒரு குறிப்பிட்ட சோதனை முறையாகும்.அவர்களே பரிசோதனை நடத்தியுள்ளனர்.

இதற்குக் காரணம் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 'ஹரக் கட்டா' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் காவலில் இருந்து தப்பியோட முயன்ற சம்பவமாகும்.
அந்த சம்பவத்தின் பின்னரே சந்தேக நபர்களை தினசரிப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையின் சுயாதீனக் குழுவே பரிசோதனை நடத்துகிறது.
கைதிகள் தற்கொலைக்கு முயலும் உபகரணங்கள் அல்லது போதைப்பொருட்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறியவே இவ்வாறான சோதனைகள் செய்யப்படுகின்றன.
மலக்குடலில் பொருட்களை மறைத்து வைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதனாலேயே இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan