நாளை கூடும் நாடாளுமன்றம் - நாமலின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்
புதிய இணைப்பு
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள்..
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...
YOU MSY LIKE THIS..
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam