யாரும் அறியாத சுரேஷ் சலேவின் மாஸ்டர் பிளான் - கடும் அழுத்தத்தில் கோட்டாபய
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பற்றிய பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
சுரேஷ் சலே கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் என குறிப்பிடப்பட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் அறிக்கைள் வெளியானது.
ஆனால் அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் தற்போது உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது குறித்த அறிக்கையானது ஒரு மாதத்திற்கு முன் வெளியானது என்றும் அதில் மேலும் பல விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டு தற்போது வெளியாகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சலே ஏன் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றார்? இதன் பின்னணியில் என்ன இருக்கின்றது? என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...