எந்த வகையிலும் ஏற்க முடியாது! முதல் தடவையாக பேரறிவாளனின் பிணை தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு எதிரான வழக்கு விடயத்தில் முடிவெடுக்காமல், தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றில் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் விசாரணை இன்று இடம்பெற்றபோது, வழக்கில், மத்திய அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் துஷார் மேத்தா மனு விசாரணையை மற்றும் ஒரு திகதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார்.
இதன்போது கருத்து தெரிவித்த நீதியரசா்கள், நீண்ட நாட்களாக பேரறிவாளன் விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் பேரறிவாளன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மீது முடிவெடுக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டனர்.
எனவே மாநில அரசாங்கத்தின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். அதேநேரம் மீண்டும் இந்த மனுவின் விசாரணையை ஒத்திவைக்க கோரக்கூடாது என்றும் நீதியரசர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தாமதிக்கப்பட்டு வருவதால், இறுதி முடிவு வரும் வரை பேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும் என அவரது சட்டத்தரணி கோரினார்.
இதனை பரிசீலிப்பதாக கூறிய நீதியரசர்கள், மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam