மேலதிக விசாரணைகளுக்காக வாகனத்தை உயர்நீதிமன்றில் ஒப்படைத்த சுஜீவ
மேலதிக விசாரணைகளுக்காக தனது வாகனத்தை உயர்நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அரச ஊழல் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதால் வாகனத்தை ஒப்படைக்குமாறு தம்மிடம் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து வாகனம் தொடர்பான அறிக்கை தேவை என நீதிமன்றில் அரச ஊழல் தடுப்புப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
மேலதிக விசாரணை
அதன்படி, தாம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டியிருந்தது என்று சேனசிங்க தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த வாரமே, அரச பகுப்பாய்வு ஆய்வாளர் தமது வாகனத்தை தவறானது அல்ல என்று அங்கீகரித்திருந்தார்.

இருப்பினும், அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்த விரும்புகிறார்கள் என்று சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan