மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சுகத் வசந்த தேர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாாளுமன்றக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது, அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி முன்மொழிந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க அதை வழிமொழிந்தார்.
தேசியக் கொள்கை
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, சுசந்த குமார நவரத்ன, சட்டத்தரணி சுசந்த தொடவத்த மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சுகத் வசந்த டி சில்வா, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, ஒரு நாடாளுமன்றம் என்ற வகையில், இந்த குழுவின் முக்கிய எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுவான இலங்கையர்களின் பார்வையை மிகவும் உணர்திறன் மற்றும் நேர்மறையான ஒன்றாக மாற்றுவதாகும்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 28 ஆண்டுகால பழமையான சட்டத்தை திருத்தி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய தேசியக் கொள்கையை திருத்துவதே குழுவின் நோக்கமாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகளை வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 14 ஆண்டுகளாக திறம்பட செயல்படுத்தப்படவில்லை.
இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய குழு தலையிடும் என்றும் சுகத் வசந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam