இன்னும் 2 நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தற்போதைய மழைக்கால வானிலை நிலவுவதற்கு, தென்மேற்கு பருவமழை நிலைமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோவின் தகவலின்படி, இலங்கையின் அருகாமையில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகொண்டுள்ளது.
திடீர் மாற்றம்
எனினும், இந்த தாழ்வு நிலை, காற்றின் ஓட்டத்தில் மறைமுக விளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது.
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்வதும், பின்னர், குறுகிய காலத்திற்குள் அது நின்றுவிடும் நிகழ்வுகள், காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் நிகழ்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2025 மே 31 க்குப் பின்னர், தற்போதைய வானிலை நிலைமைகளின் தீவிரம்; குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 15 மணி நேரம் முன்

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri
