மானிப்பாய் பிரதேச சபையில் பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!
பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(20.02.2026) இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிகையலங்கார பிரச்சினையால் பல பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

ஆகவே சாதாரண மக்களுக்கு சிகையலங்காரம் செய்கின்றது போன்று பாடசாலை மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்ய கூடாது.
ஆகவே எமது பிரதேசத்தில் இருக்கின்ற சிகையலங்கார சங்கத்துடன் நாங்கள் இதுபற்றி கலந்துரையாடுவோம். அவர்கள் நிச்சயமாக இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ஏனெனில் அவர்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். ஆகவே, இந்த தீர்மானத்தின் மூலம் நாங்கள் அதனை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam