கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும்: என்.எம்.ஆலம்

Tamil nadu India Kachchatheevu
By Ashik Apr 08, 2024 03:18 PM GMT
Report

இந்தியா(India) மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடயம் தோன்றியுள்ளது. எனவே கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (08.04.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திரா காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அழைப்பால் காப்பாற்றப்பட்ட கச்சதீவு

இந்திரா காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அழைப்பால் காப்பாற்றப்பட்ட கச்சதீவு

சட்டவிரோத கடற்றொழில்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடையம் தோன்றியுள்ளது.

இதை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்த கூறி இருந்தாலும் அங்குள்ள கடற்றொழிலாளர்களை குறிப்பாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து மாற நினைக்கின்ற கடற்றொழிலாளர்களை இத்தொழிலில் உள் வாங்கி அவர்களை உற்சாக மூட்டி மீண்டும் மீண்டும் அவர்களை சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கும், சட்டவிரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க ஆதரிப்பதாக காணப்படுகின்றது.

கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும்: என்.எம்.ஆலம் | Stop Dealing About Kachchatheevu For Politics

அரசியல் நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்திலும் இந்திய மத்திய அரசும் மிகவும் கவனமாக செயல் படுகிறது. கச்சதீவு விடயத்தை பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தியது.

தமிழக அரசின் ஒவ்வொரு கால கட்டத்திலான கோரிக்கையை மத்திய அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்று அந்த சாதகத்தின் வெளிப்பாடுதான் தமிழகம் தான் கச்சதீவை வழங்கியதற்கு முழுக்காரணம் என்று இன்று அவர்களின் அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் ஒரு பூதாகரமான விடயமாக மாற்றியுள்ளனர்.

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்

முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள்

இலங்கை கடற்றொழிலாளர்களை பொறுத்தவரையில் குறிப்பாக வட பகுதி கடற்றொழிலாளர்களை பொறுத்தவரையில் இவர்களுக்கான ஒரே நிலைப்பாடு இந்திய கடற்றொழிலாளர்கள் எமது எல்லையை தாண்டக்கூடாது. எமது எல்லைக்குள் வந்து சட்ட விரோதமான இழுவை மடி தொழிலை முன்னெடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றனர்.

கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும்: என்.எம்.ஆலம் | Stop Dealing About Kachchatheevu For Politics

எமது கடற்றொழிலாளர்கள் முகம் கொடுக்கும் துன்பங்களும்,போராட்டமும் அதனை வலியுறுத்தியதாக உள்ளது. தமிழக அரசாக இருந்தாலும்,இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக இவ்விடயத்தை மீண்டும் மீண்டும் பேசி தமிழககடற்றொழிலாளர்களை உற்சாகப் படுத்துவதும் இவ்விடயத்தை கேலிக் கூத்தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இரு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை கன்னியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியலுக்காக பேசப்படும் விடயமாக இருந்தால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவிலும் மக்களின் மனதிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கக்கூடும்.

ஆப்பிரிக்காவில் படகு மூழ்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

ஆப்பிரிக்காவில் படகு மூழ்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள்

எனவே கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும்,மத்திய அரசும் கைவிட வேண்டும். இலங்கை அரசும் வடபகுதியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் இக்கருத்திற்கு எவ்வித கருத்துக்களையும் கூறுவதாக இல்லை.

வட பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்பையும் முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்கள் மௌனிகளாக உள்ளனர். கடற்தொழில் அமைச்சர் அதற்கு மேலாக ஒரு படி சென்று இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த ஒரு புறம் கருத்தைக் கூறுகிறார்.

கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும்: என்.எம்.ஆலம் | Stop Dealing About Kachchatheevu For Politics

மறுபுறம் இந்திய கம்பெனிகளின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களுக்கு கதவை திறந்து விடுகின்றார்.அவர்கள் வந்து செயல்பாட்டை முன்னெடுக்க ஆதரவு வழங்குகின்றார்.

அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது என கூறியுள்ளார்.. மேலும் கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து

இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US