எந்தவொரு கப்பலுக்கும் அனுமதி இல்லை! ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் எடுத்துள்ள நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை விடுத்துள்ளதாக ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கத் தளங்கள் சேதம்
ஈரானியத் தாக்குதல்களால் இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri